உள்ளூர் செய்திகள்

தூக்கி வீசி சென்ற போதை பொருட்கள்.

ரெயில் நிலையம் அருகே போதை பொருட்களை வீசி சென்ற கும்பல்

Published On 2022-10-05 09:25 GMT   |   Update On 2022-10-05 09:25 GMT
  • போலீசுக்கு பயந்து ஓட்டம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே நிலையத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா போதை பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை தனிப்படை ெரயில்வே போலீசார் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தினமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் கடத்தி வரும் கஞ்சா பான் மசாலா மற்றும் குட்காவை ெரயிலில் கடத்தி வருவதும் ெரயில்வே தனிப்படை போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடர்ந்து வரும் நிலையில் வழக்கம்போல இன்றும் ரெயில்வே தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

போலீசார் சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் போலீசாருக்கு பயந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை ரெயில் நிலையத்திற்கு அருகாமையில் கொட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News