உள்ளூர் செய்திகள்

மது விற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2022-07-23 09:20 GMT   |   Update On 2022-07-23 09:20 GMT
  • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
  • 10 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் கள்ளத்தனமாக கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாமலேரிமுத்தூர், பொன்னேரி காந்திநகர் பகுதியில் சோதனை செய்தபோது ராஜி என்பவரின் மகன் சுந்தர் (வயது24) என்பவர் வீட்டின் பின்புறத்தில் மண்பானையில் 10 லிட்டர் கள்ள சாராயத்தை கள்ளத்தனமாக பதுக்கி வைத்துக்கொண்டிருந்தார்.

அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சின்ன பொன்னேரி பகுதியில் சோதனை செய்தபோது ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி திலகா (45) மற்றும் பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் செந்தில்குமார் (52) ஆகிய இருவரும் வீட்டில் மறைத்து வைத்து கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 3 பேரையும் கைது செய்து, 10 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து அளித்தனர்.

Tags:    

Similar News