உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2022-07-29 09:39 GMT   |   Update On 2022-07-29 09:39 GMT
  • அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சுமார் 25 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

ரெயில் மோதியது

அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்தவர் மா நிறம் உடையவர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட் லைட் பச்சை கலர் ஷர்ட் அணிந்துள்ளார்.

2 பேர் பலி

மேலும் அதேபோல வளத்தூர் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்கவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்தவர் மாநிறம் உடையவர் இவர் நீல கலர் லுங்கி அணிந்துள்ளார். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News