உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே சரள்மண் அள்ளிய லாரி பறிமுதல் - டிரைவர் கைது

Published On 2022-06-07 09:33 GMT   |   Update On 2022-06-07 09:33 GMT
  • கயத்தாறு அருகே சரள்மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டு அதன். டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • சிவஞானபுரம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் பிடித்தனர்.

கயத்தாறு:

கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று சிவஞானபுரம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியின் ஓட்டுநரான கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனி பகுதியை சேர்ந்த சங்கிலி பாண்டி (வயது 34) என்பவரை கைது செய்தார்.

அவரிடமிருந்து 4 யூனிட் சரள் மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News