உள்ளூர் செய்திகள்

செய்யாற்றில் செத்து மிதக்கும் பன்றியால் துர்நாற்றம்

Published On 2023-07-28 08:50 GMT   |   Update On 2023-07-28 08:50 GMT
  • அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
  • நோய் தொற்று பரவும் அபாயம்

செங்கம்:

செங்கம் பகுதியில் பொதுமக்களின் நீர்ஆதாரமாக விளங்கும் செய்யாற்றில் தற்போது நீர்வரத்து இல்லை.

நகரில் பல்வேறு இடங்களில் இருந்து கழிவு நீர் கால்வாய்கள் மூலம் செய்யாற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. குளம் போல் செய்யாற்றில் கழிவுநீரும், மலை போல் குப்பைகளும் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் செய்யாறில் குளம் போல் தேங்கி ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரில் பன்றி ஒன்று செத்து மிதந்து கிடக்கிறது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்யாற்றில் செத்து மிதக்கும் பன்றியை அப்புறப்படுத்தி, செய்யாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், அதேபோல் அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதை அகற்றி சுகாதாரம் பேணி காத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News