உள்ளூர் செய்திகள்

வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-08-11 09:15 GMT   |   Update On 2023-08-11 09:15 GMT
  • வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்த வர்கள் அரவிந்தன் (வயது 19), இவரது நண்பர்கள் கோகுலகிருஷ்ணன் (19), சாய் பூசன் (19).

இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் பிரம்மதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வெம்பாக்கம் பொம்மாத்தான் கோவில் அருகே புத்தனூரை சேர்ந்த மோகன் (37), சரவணன் (45), ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை மோகனம், சரவணனும் வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் வாலிபர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அரவிந்தனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பாபு என்பவர் என் வாலிபர்களை தாக்குகிறாய் என்று கூறி தகராறு தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த அரவிந்தனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன், சரவணனை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News