உள்ளூர் செய்திகள்

திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி

உடன்குடி சந்தையடியூரில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி

Published On 2022-12-18 09:34 GMT   |   Update On 2022-12-18 09:34 GMT
  • சந்தையடியூர் தாகம் தணிந்தபதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா நடந்தது
  • பக்தர்கள் தங்களது வீடுகளில் செய்த வகை வகையான பலகாரங்களை கொண்டு வந்துஅய்யாவிற்கு படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உடன்குடி:

உடன்குடி சந்தையடியூர் தாகம் தணிந்தபதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா நடந்தது. இத்திருக்கோவிலில் திருஏடு வாசிப்பு விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்துவிழாநாட்களில் திருஏடு வாசிப்பு, அன்னதானம்நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, அன்னதர்மம் வழங்கல், பக்தர்கள் தங்களது வீடுகளில் செய்த வகை வகையான பலகாரங்களை கொண்டு வந்துஅய்யாவிற்கு படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஏராளமான அய்யாவழி மக்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலையில் திருக்கல்யாணம், அன்னதர்மம் வழங்கல் நடைபெற்றது. இன்று மாலையில் பட்டாபிஷேகம், வாகன பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யாவழி இறை மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News