உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2022-08-08 09:51 GMT   |   Update On 2022-08-08 09:51 GMT
  • மருத்துவக்கல்லூரி சாலை சாரதா நகரை சேர்ந்தவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
  • புகார்கள் குறித்தும் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை சாரதா நகரை சேர்ந்தவர்மின்னல் ராஜ் (வயது 30). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதை போல் மருத்துவ கல்லூரி பகுதியை சேர்ந்த ஐயனார் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இந்த இரண்டு புகார்கள் குறித்தும் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News