உள்ளூர் செய்திகள்
கடலூரில் வீட்டை விட்டு சென்ற பெண் மாயம்
- கடலூரில் வீட்டை விட்டு சென்ற பெண் மாயமானார்.
- ண்ணன் ராஜ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் புதுகுப்பம் போலீஸ் காலனி பகுதியில் உள்ள பகவந்தர் நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால். அவரது மகள் உதயமலர் (வயது 34) இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த வேணுகோபால், தனது மகள் உதயமலரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் உதயமலர் கிடைக்கவில்லை. இது குறித்து உதயமலரின் அண்ணன் ராஜ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதய மலர் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை செய்து உதயமலரை தேடி வருகின்றனர்.