உள்ளூர் செய்திகள்

இரும்பு கம்பிகளை திருடியவர் கைது

Published On 2022-10-07 10:09 GMT   |   Update On 2022-10-07 10:09 GMT
  • புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வருகிறார்.
  • இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிங் மெஷின் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டார்.

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள மோட்டூர் காலனி பகுதியில் கண்ணன் (வயது 38).இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் சாப்பிடச் சென்றபோது மர்ம நபர் அந்த புதிய கட்டிடத்திற்கு வந்து அங்கு இருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிங் மெஷின் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டார்.இது குறித்து கண்ணன் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சேலம் ரெட்டிபட்டி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த கவுரி சங்கர் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கட்டிடத்தில் திருடப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து போலீசார், கவரி சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News