உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி பேசினார்.




திண்டுக்கல்லில் தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் பொதுக்குழு கூட்டம்

Published On 2022-06-25 07:32 GMT   |   Update On 2022-06-25 07:32 GMT
  • திண்டுக்கல்லில் தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
  • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் கழகம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார்.மாநில இணைச் செயலாளர் ராஜ்மோகன், மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெறும் அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும். 2008-2009 பள்ளி க்கல்வித்துறையில் மானிய கோரிக்கையில் பள்ளிகளில் உடற்கல்வி மேம்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்.பதவி உயர்வு மூலம் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றில் பணி அமர்த்தப்படுவோருக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வர் பணியிடை மாற்றம் வழங்கும் அரசாணையை மாற்றம் செய்திட வேண்டும்.

8,9,10 ஆம் வகுப்பில் உடற்கல்வி, உடல்நலக் கல்வி, தடகளம் விளையாட்டு மற்றும் யோகா பாடத்தை கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிறைவாக மாவட்ட தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News