உள்ளூர் செய்திகள்

உச்சிப்புளி அருகே தொழிலாளி கொடூர கொலை

Published On 2022-08-25 04:08 GMT   |   Update On 2022-08-25 04:08 GMT
  • மனைவியை பிரிந்து வாழ்ந்த அலெக்ஸ் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.
  • சம்பவத்தன்று இரவு அலெக்ஸ் தன்னுடன் பணிபுரியும் நண்பர் உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் மது குடிக்க சென்றார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 38), கட்டிட கான்கிரீட் கலவை எந்திரத்தை இயக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக அலெக்ஸ் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் உச்சிப்புளி அலைகாத்த வலசை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தென்னந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அலெக்ஸ் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அலெக்ஸ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை பிரிந்து வாழ்ந்த அலெக்ஸ் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அலெக்ஸ் தன்னுடன் பணிபுரியும் நண்பர் உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் (23) மது குடிக்க சென்றார்.

தோப்பில் மது குடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் போதையில் பிரபுவின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபு மது பாட்டிலை உடைத்து அலெக்சை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணைகள் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News