உள்ளூர் செய்திகள்

வடபழனி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள் மீது மாநகர பஸ் மோதி மாற்றுத் திறனாளி பலி

Published On 2022-06-25 09:44 GMT   |   Update On 2022-06-25 09:44 GMT
  • வடபழனி மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • பஸ் மேம்பாலத்தில் மேலே ஏறும் போது மாற்றுத்திறனாளியின் வாகனத்தின் மீது மோதியது.

சென்னை:

வடபழனி மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர குளிர்சாதன சொகுசு பஸ் சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ் மேம்பாலத்தில் மேலே ஏறும் போது மாற்றுத்திறனாளியின் வாகனத்தின் மீது மோதியது. இதில் மாற்றுத்திறனாளியின் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து பஸ்சை ஓட்டி வந்த ஓட்டுநரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News