உள்ளூர் செய்திகள்
வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய 2 பெண்கள் கைது
- நகைகளை ஊழியர்கள் சரி பார்த்தபோது ஒரு பவுன் ‘பிரேஸ்லெட்’ மாயமாகி இருந்தது.
- வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போரூர்:
வடபழனி, ஆற்காடு சாலையில் நகை கடை நடத்தி வருபவர் கவுதம் ஜெயின். இவரது கடைக்கு "டிப் டாப்" உடையில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகைகள் வாங்குவது போல் பார்த்துவிட்டு பின்னர் நாளை வருவதாக கூறிச்சென்று விட்டனர்.
பின்னர் நகைகளை ஊழியர்கள் சரி பார்த்தபோது ஒரு பவுன் 'பிரேஸ்லெட்' மாயமாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது நகை வாங்குவது போல் வந்த 2 இளம்பெண்களும் நகையை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லோகநாயகி, மயிலாடு துறையை சேர்ந்த சுதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.