உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணம் வாங்க ரூ.25 லட்சம் உதவி

Published On 2023-07-21 09:22 GMT   |   Update On 2023-07-21 09:22 GMT
  • திருவொற்றியூர், எல்லையம்மன்கோவில் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
  • காசோலையை கலாநிதி வீராசாமி எம்.பி.யிடம் வழங்கினார்.

திருவெற்றியூர்:

திருவொற்றியூர், எல்லையம்மன்கோவில் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமியின் முயற்சியில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள இந்தியன் ஆயில் எல்.என்.ஜி. நிறுவனம் தனது சி. எஸ். ஆர். நிதியில் ரூ.25 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒதுக்கியது.

நிறுவன அதிகாரி பழனிவேல் இதற்கான காசோலையை கலாநிதி வீராசாமி எம்.பி.யிடம் வழங்கினார். அப்போது அதிகாரிகள் சம்பத்குமார், தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News