தஞ்சை அருகே குடோனில் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
- குடோனில் 20 சாக்கு பைகளில் 50 கிலோ வீதம் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே இலுப்பைக்கோரை பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த குடோனில் 20 சாக்கு பைகளில் 50 கிலோ வீதம் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூலமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (வயது 50) என்பவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதனை மாட்டு தீவனத்துக்கு பயன்படுத்துவதும், அரிசியை பதுக்கி வைக்க ஒரு குடோன் அமைத்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.