உள்ளூர் செய்திகள்
சென்னையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 48 பேர் கைது
- 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாநகர போலீசார் கடந்த 25-ந்தேதி முதல் 31-ந்தேதி 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்வகை எடுத்தனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 743.9 கிலோ மாவா, பணம் ரூ.28,720/-, 1 செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.