உள்ளூர் செய்திகள்
'தலையெழுத்து'... உங்களது! 'கையெழுத்து'.... எங்களது!
- கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் கூட உதிக்கலாம்.
- பா.ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளில் போடும் முதல் கையெழுத்து இந்து அறநிலையத்துறையை ஒழிப்பது தான். இந்து அறநிலையத்துறைக்கு அன்றே கடைசி நாளாக இருக்கும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.
அவருக்கு பதிலடி கொடுத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் கூட உதிக்கலாம். ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் சரி எத்தனை ரெய்டுகள் வந்தாலும் சரி நடக்காது. இது திராவிட மண். அண்ணாமலைக்கு கையெழுத்து போடும் வாய்ப்பை மக்கள் கொடுக்க மாட்டார்கள். அது உங்கள் தலையெழுத்து.கையெழுத்து என்றும் எங்களது தான் என்றார்.