உள்ளூர் செய்திகள்
- பட்டாபிராமபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் பங்கேற்றார்.
திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் பங்கேற்றார். கால்நடை உதவி மருத்துவர் ராஜேஸ்வரி, ஆய்வாளர் ஸ்டாலின், உதவியாளர் அம்மு ஆகியோர் கலந்துக் கொண்டு கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், பெரியம்மை தடுப்பூசி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.