விருகம்பாக்கத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- சினிமா துணை நடிகர் கைது
- சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போரூர்:
சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்த சினிமா துறையை சேர்ந்த தம்பதிகளின் 6 வயது மகள் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் முதல் தளத்தில் சினிமா துணை நடிகரான ராஜூ (வயது 49) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமி முதல் தளத்திற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் திடீரென சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ராஜூவின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்து அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் ராஜூவின் அத்துமீறல் குறித்து தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.