உள்ளூர் செய்திகள்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியவன்- 50 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது
- செயின் பறிப்பு வழக்கில் சீனிவாசனுக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- கடந்த மே மாதம் அவரை புழல் சிறைக்குஇடமாற்றம் செய்வதற்காக அழைத்து வந்த போது வலிப்பு ஏற்பட்டது.
போரூர்:
ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற பர்மா சீனு (48).இவன் மீது 50க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. 2017-ம் ஆண்டு சேலத்தில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சீனிவாசனுக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் அவரை புழல் சிறைக்குஇடமாற்றம் செய்வதற்காக அழைத்து வந்த போது வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்தபோது சீனிவாசன் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடிவந்தனர். இதற்கிடையே ஆழ்வார்திருநகர் பகுதியில் பெண் ஒருவரிடம் செயின் பறித்து தப்பிய சீனிவாசனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.