திருவொற்றியூரில் குடும்ப தகராறில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
- புவனேஸ்வரி போலீஸ்நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த உதய குமார். இவரது மனைவி சிந்து. கணவருடன் ஏற்பட்ட தகராறில் சிந்து அவரை பிரிந்து திருவொற்றியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உதயகுமார் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிந்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது சிந்துவுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி உதயகுமாரின் அக்காள் புவனேஸ்வரி போலீஸ்நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவருக்கு உடந்தையாக உதயகுமார் மற்றும் அவரது உறவினரான ஜெயந்தி இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து உதய குமார், புவனேஸ்வரி, ஜெயந்தி ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.