உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 60 கிலோ கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

Published On 2022-07-04 10:17 GMT   |   Update On 2022-07-04 10:17 GMT
  • அன்புராஜ் மற்றும் சிவா ஆகியோர் குறித்து தகவல்கள் சேகரித்தனர். இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
  • கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போலீசார் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற துணிச்சலில் கஞ்சா கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை:

சென்னை வட பழனியைச் சேர்ந்தவர்கள் அன்புராஜ், சிவா. இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, மாநில போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அன்புராஜ் மற்றும் சிவா ஆகியோர் குறித்து தகவல்கள் சேகரித்தனர். இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இவர்கள் பஸ்சில் பயணியர் போல ஆந்திராவில் இருந்து கோயம்பேடு பகுதிக்கு, 30 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் வேளச்சேரி சக்கரபாணி தெருவில், வாடகைக்கு அறை எடுத்து அங்கு, கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்து 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போலீசார் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற துணிச்சலில் கஞ்சா கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News