உள்ளூர் செய்திகள்

சைசாக செருப்புகளை திருடும் மர்ம நபர் - அதிர்ச்சியில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

Published On 2023-11-07 15:33 GMT   |   Update On 2023-11-07 15:33 GMT
  • அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகின.
  • சட்டை அணிந்த ஒருவர் வீட்டின் வெளியே கிடந்த செருப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

தாம்பரம்:

தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகி வந்தன.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் தாம்பரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கடந்த ஒன்றாம் தேதி சட்டை அணிந்த ஒரு நபர், படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். வீடுகளிடின் வெளியே கிடந்த செருப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

அவர் செருப்புகளை சைஸ் பார்த்து திருடிச் செல்கிறார். திருடர்கள் நைசாக திருடிச் செல்வதை பார்த்திருப்போம், இது என்ன சைசாக பார்த்து எடுத்துச் செல்கிறார் என குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். திருடிச் செல்லும் செருப்புகளை வார சந்தையில் விற்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News