உள்ளூர் செய்திகள்

அம்பத்தூரில் 10 கார்களின் கண்ணாடியை நொறுக்கி ரவுடி கும்பல் அட்டகாசம்

Published On 2022-08-18 10:37 GMT   |   Update On 2022-08-18 10:37 GMT
  • மர்ம கும்பல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார், மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
  • மதுபோதையில் வந்த ரவுடி கும்பல் வாகனங்களை நொறுக்கி தப்பி இருப்பது தெரியவந்தது.

அம்பத்தூர்:

அம்பத்தூர், இந்தியன் வங்கி காலனி, மாயா தெருவில் சாலையோரத்தில் நேற்று இரவு ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார், மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் 10 கார்களில் இருந்த அனைத்து கண்ணாடிகள் முழுவதும் நொறுங்கியது.

அதிகாலையில் காரின் உரிமையாளர்கள் வெளியே வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுபோதையில் வந்த ரவுடி கும்பல் வாகனங்களை நொறுக்கி தப்பி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வாகனங்களை நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விபரங்களை சேகரித்து வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News