உள்ளூர் செய்திகள்

குப்பையில் கொட்டப்பட்டுள்ள ரேசன் அரிசிகள்.

பாவூர்சத்திரத்தில் குப்பையில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி

Published On 2023-03-13 08:07 GMT   |   Update On 2023-03-13 08:07 GMT
  • பாவூர்சத்திரத்தில் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் மாணவர்களுக்கான அரசு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
  • அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு சிலர் அதன் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

தென்காசி:

பாவூர்சத்திரத்தில் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் மாணவர்களுக்கான அரசு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு சிலர் அதன் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் குப்பைகளோடு குப்பையாக தெரு ஓரத்தில் ரேஷன் அரிசிகள் கொட்டப்பட்டுள்ளதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 20 கிலோ அளவிற்கும் மேலான ரேஷன் அரிசி அங்கு கொட்டப்பட்டு கிடந்தது. ரேஷன் அரிசியை அங்கு கொட்டி சென்றது யார்? ரேஷன் அரிசியை வாங்கிச் சென்ற வியாபாரிகளில் யாரேனும் ஒருவர் கொட்டியிருப்பார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News