பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.
- தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
2022-23ஆம்ஆண்டிற்கானசுதந்திரதினவிழாவை முன்னிட்டுபெண்களின்முன்னேற்றத்திற்கு சிறந்த
சேவை புரிந்தசமூகசேவகர்மற்றும்தொண்டுநிறுவனத்திற்கானவிருதுகள்வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தமிழ்நாட்டைபிறப்பிடமாகக்கொண்டவராகவும், 18 வயதிற்குட்பட்ட பெண்ணாகவும் இருத்தல்வேண்டும்.சமூக நலன் சார்ந்தநடவடிக்கைகள், பெண்குலத்திற்குபெருமைசேர்க்கும்வகையிலானநடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்றதுறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்துமக்களுக்கு தொண்டாற்றும்வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
மேற்காணும்வகையில் சாதனைபுரிந்தவர்களாக இருப்பின்உரியகருத்துருவுடன்மாவட்ட சமூகநலஅலுவலகம், ராமநாதபுரம் (மாவட்ட கலெக்டர் வளாகம்) இணைப்புபடிவம்பெற்றுமுழுமையாகதமிழ்மற்றும்ஆங்கிலத்தில் நிரப்பிவழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும்தகவலுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.