உள்ளூர் செய்திகள்
வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
- வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மனுக்கு 46-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஊர்வலம், காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில் தினசரி பூஜைகள், மாணவ-மாணவிகளின் விளையாட்டு போட்டிகள், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.