உள்ளூர் செய்திகள்

கீழக்கரையில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-09 08:52 GMT   |   Update On 2022-08-09 08:52 GMT
  • கீழக்கரையில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • வீரகுல தமிழர் படை நகர அமைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

கீழக்கரை

கீழக்கரையில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் பாஷித் அலி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழக்கரை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், சுகாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், தெரு விளக்குகள் இருந்தும் மின் விளக்குகள் எரியாததை கண்டித்தும், கீழக்கரை மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

வீரகுல தமிழர் படை நகர அமைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் தாரிக், பொருளாளர் ஹபீப், ம.ஜ.க. இப்ராஹிம், எஸ்.டி.பி.ஐ. மேற்கு நகர தலைவர் அசரப், தொகுதி செயற்குழு உறுப்பினர் சாதிக்அலி, மக்கள் செய்தி தொடர்பாளர் சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News