உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-07-11 09:38 GMT   |   Update On 2022-07-11 09:38 GMT
  • நல்லதம்பி செங்கோட்டையில் ரெயில்வே கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.
  • தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் செங்கோட்டையில் ெரயில்வே கேங்மேனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்லும்போது சங்கரன்கோவில் ெரயில் நிலையத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செங்கோட்டைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை.

இதுகுறித்து அவர் சங்கரன்கோவில்போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News