உள்ளூர் செய்திகள்

தண்டவாளம் பராமரிப்பு பணி போத்தனூர் வழியாக ரெயில்கள் இயக்கம்

Published On 2022-10-19 09:06 GMT   |   Update On 2022-10-19 09:06 GMT
  • சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை-போத்தனூர் மார்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி இன்றும், நாளையும் (20-ந் தேதி) நடக்கிறது.
  • கோவைக்கு செல்லாமல் மாற்றுப் பாதையில் இயங்கும் என சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம்:

தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக கோவை வழியாக செல்லும் ரெயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை-போத்தனூர் மார்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி இன்றும், நாளையும் (20-ந் தேதி) நடக்கிறது. இதனால், இந்த இரு நாட்களும் சேலம் வழியே இயக்கப்படும் 3 ரெயில்கள் கோவைக்கு செல்லாமல் மாற்றுப் பாதையில் இயங்கும் என சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, பிலாஸ்பூர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22619), கோவைக்கு இன்று மதியம் 3.42 மணிக்கு வந்து சேர்வதற்கு பதிலாக மாற்றுப்பாதையாக சேலம், ஈரோடு, திருப்பூருக்கு அடுத்து இருகூர்-போத்தனூர் வழித் தடத்தில் இயக்கப்படுகிறது.இதனால், கோவைக்கு வராது. இதேபோல், திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22630) இன்று கோவைக்கு மதியம் 3.07 மணிக்கு வந்தடைய வேண்டும். ஆனால், இந்த ரயிலும் மாற்றுப்பாதையாக இருகூர் - போத்தனூர் வழியே இயக்கப்படுகிறது.

பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22670), பாட்னாவில் நேற்று புறப்பட்டுள்ள நிலையில் நாளை (20-ந் தேதி) கோவைக்கு மாலை 5.02 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலும் கோவைக்கு செல்லாமல் இருகூர்-போத்தனூர் வழியே இயக்கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News