உள்ளூர் செய்திகள்

சேறும் சகதியுமான சாலை.

சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-04 09:23 GMT   |   Update On 2022-08-04 09:23 GMT
  • தரமற்ற சாலையானது தற்போது மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
  • பள்ளி மாணவர்களும் வேறு வழியின்றி ரெயில் தண்டவாளத்தில் ஏறிச் செல்லும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

திருத்துறைப்பூண்டி :

திருத்துறைபூண்டி தாலு க்கா, உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்கு உட்ப்பட்ட நாச்சிகுளம் கிராமம் ரயில்வே லையன் ஓரப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சாலையானது தரமற்ற முறையில் காணப்ப டுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமாககாட்சி யளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துடன் செல்கி ன்றனர். நடந்து செல்வோரும் அவதிப்படுகின்றனர். நோயாளிகள் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் செல்லமு டியாத அளவுக்கு சாலை காட்சிய ளிக்கிறது பள்ளி மாணவர்களும் வேறு வழியின்றி ரயில் தண்டவாளத்தில் ஏறிச் செல்லும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், மற்றும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது காலம் தாழ்த்தாமல் புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News