- சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார்
- வாலிபர் கடத்தி சென்றதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் குப்பூர் அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதிையச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.
இவர் சோளகொட்டாய் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமிக்கும் மான்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் நந்தகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சிறுமியின்தாயார் கண்டித்துள்ளார். இதனால் சிறுமி விரக்தியில் இருந்தார்.
இந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாய் சித்ரா தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை நந்தகுமார் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.