உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிக்கு பரிசு கேடயத்தை ஏ.பி.ஏ. கல்லூரி செயலாளர் திருமாறன் வழங்கிய காட்சி.

கல்லணை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த பிளஸ்-2 மாணவிக்கு ஏ.பி.ஏ. கல்லூரியில் இலவச சேர்க்கை

Published On 2022-06-23 09:28 GMT   |   Update On 2022-06-23 09:28 GMT
  • இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
  • மாணவி சுந்தரி விரும்பிய பி.காம். ஹானர்ஸ் படிப்பில் சேர்வதற்கான 100 சதவீதம் கட்டண சலுகையோடு கூடிய சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள ஏ.பி.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் ஹானர்ஸ்துறை தலைவராக பேராசிரியர் சுடலைமணி உள்ளார். இவரது மகள் சுந்தரி டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து மாணவி சுந்தரிக்கு ஏபிஏ கல்லூரி செயலாளர் திருமாறன், கல்லூரி முதல்வர் ஆனந்த் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவி சுந்தரி விரும்பிய பி.காம். ஹானர்ஸ் படிப்பில் சேர்வதற்கான 100 சதவீதம் கட்டண சலுகையோடு கூடிய சேர்க்கை ஆணையை கல்லூரி செயலாளர் திருமாறன் வழங்கினார்.

Tags:    

Similar News