உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் காத்திருக்கும் பெண் பயணிகள்.

திண்டுக்கல்-நிலக்கோட்டை அரசு பஸ் சேவை குறைப்பால் பயணிகள் அவதி

Published On 2022-09-04 04:42 GMT   |   Update On 2022-09-04 04:42 GMT
  • நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாணவ-மாணவிகள், பூ வியாபாரிகள் ,வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் அரசு டவுன்பஸ்சில் சென்று வருகின்றனர்.
  • பஸ் சேவை குறைப்பால் தற்போது ஒரு மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல்லுக்கு மாணவ-மாணவிகள், பூ வியாபாரிகள் ,வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் அரசு டவுன்பஸ்சில் சென்று வருகின்றனர்.

தமிழக அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்தது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைந்தனர். ஆனால் தற்போது பஸ்சேவை குறைக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இங்கு அரைமணிநேரத்திற்கு ஒரு பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.

ஆனால் தற்போது ஒரு மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் நீண்டநேரமாக காத்திருக்கும் பெண் பயணிகள் தனியார் பஸ்சில் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

தமிழக அரசு பெண்களுக்கு டவுன்பஸ்சில் சிறப்பு சலுகை வழங்கியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பூ வியாபாரிகள் பயனடைந்தனர். ஆனால் தற்போது பஸ்சேவை குறைக்கப்பட்டுள்ளது. அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேண்டுமென்றே சேவையை குறைக்கின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு தீர்வு காணாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News