உள்ளூர் செய்திகள்
- சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த மூதாட்டி மாயமானார்.
- அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது பற்றி அவரது மகன் அஸ்தம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி பாக்கியம் (வயது 86). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது பற்றி அவரது மகன் அஸ்தம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்கியம் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகின் றனர்.