உள்ளூர் செய்திகள்
செஞ்சி அருகே பஸ்சை நிறுத்தாத கண்டக்டரை தாக்கிய தே.மு.தி.க. பிரமுகர்
- செஞ்சி அருகே பஸ்சை நிறுத்தாத கண்டக்டரை தே.மு.தி.க. பிரமுகர் தாக்கினார்.
- செஞ்சிஅருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55).
விழுப்புரம்:செஞ்சிஅருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55) இவர் விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அவர் பாலப்பட்டு கிராமத்தில் பஸ்சை நிறுத்த கூறி உள்ளார். ஆனால் கண்டக்டர் கொளஞ்சி பஸ் பாலப்பட்டில் நிற்காது என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் ஊர்க்காரர்களுக்கு போனில் தகவல் தெரிவித்து உள்ளார். இதனை அறிந்த கோவிந்தன் உறவினர்கள் திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்ஸை மறித்து கண்டக்டரை தாக்கினர். இது குறித்து கண்டக்டர் கொளஞ்சி அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் தயாநிதி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.