உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளி பகுதியில் சாலையை மூடிய பனிப்பொழிவு.

நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு

Published On 2022-10-18 09:06 GMT   |   Update On 2022-10-18 09:06 GMT
  • பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஏரிகள் வேகமாக நிரம்பின.
  • அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக காலமாக பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் அரூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஏரிகள் வேகமாக நிரம்பின.

ஒரு சில ஏரிகள் மற்றும் அணைகளில் இருந்து முழு கொள்ளளவை நிரம்பியதை அடுத்து உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை நீர் இருப்பதும் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலையை நிலவி வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி மற்றும் தருமபுரி, நல்லம்பள்ளி, பாளையம் புதூர், வெள்ளக்கல், ஏலகிரி, அதியமான் கோட்டை, நாகர்கூடல் உள்ளிட்ட பகுதியில் அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் பனிப்பொ ழிவு காரணமாக வாகனங்க ளும் இயக்க முடியாமல் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர்.

Tags:    

Similar News