உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.


ஆடித்தபசு திருவிழாவையொட்டி சங்கரநாராயண சுவாமி கோவிலில் நகராட்சி சேர்மன் ஆய்வு

Published On 2022-07-31 09:20 GMT   |   Update On 2022-07-31 09:20 GMT
  • ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • தற்காலிக குடிநீர் வசதி பொதுமக்கள் வசதிக்காக உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கோயில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் சுகாதாரப் பணிகள் மற்றும் தற்காலிக குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் இடங்கள் ஏற்கனவே உள்ள கழிப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அதிகாரி களிடம் சுகாதார பணிகளை திருவிழா நாட்களில் முழு நேரமும் கண்காணித்து குப்பைகள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், தற்காலிக குடிநீர் வசதி பொதுமக்கள் வசதிக்காக உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் தற்காலிக குடிநீர் டேங்குகளில் குடிநீர் இருப்பை அடிக்கடி ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களை கேட்டு கொண்டார்.

தொடர்ந்து கழிப்பிடத்தை நிர்வகித்து வருபவர்களிடம் அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் விழா காலங்களில் பொதுமக்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆய்வின் போது நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News