உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-09-13 10:13 GMT   |   Update On 2023-09-13 10:13 GMT
  • தாமஸ் ஹால் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
  • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தஞ்சாவூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தெற்கு மலைப்பட்டி யை சேர்ந்த ரத்தினவேல் என்பவரின் மகன் விஜயராஜ் (வயது 28). சம்பவத்தன்று இவர் தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்குள்ள தாமஸ் ஹால் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சிய டைந்த விஜயராஜ் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவி ல்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் விஜயராஜ் புகார் செய்தார்.

இதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News