உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்

Published On 2022-09-04 09:33 GMT   |   Update On 2022-09-04 09:33 GMT
  • களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி.
  • கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயராணிக்கு கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புக்காக அவர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயராணி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஜெயராணியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News