மாஞ்சோலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
- ரூ.2லட்சம் மதிப்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- நலிவுற்ற 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள், 17 தையல் மிசின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மாஞ்சோலையில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போரில் தாமிரபரணியில் உயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரூ.2லட்சம் மதிப்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலிவுற்ற 200குடும்பங்களுக்கு ரூ.2லட்சம் மதிப்பில் அரிசி, மளிகை சாமான்கள், 17 தையல் மிசின்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், தலைமை நிலையச் செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங் தேவேந்திரன், மானூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சுரேஷ் பாண்டியன், கண்மணி லலிதா, செல்வம், பேராட்சி பாண்டியன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.