உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் மக்கள் நீதிமய்யம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-29 07:29 GMT   |   Update On 2022-07-29 07:29 GMT
  • மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • மின்விசிறி, டி.வி., மிக்சி ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் சீனிவாச பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர் திருமூர்த்தி, மகளிரணி செயலாளர் சமேஸ்வரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மின்கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் மின்விசிறி, டி.வி., மிக்சி ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நத்தம் ஒன்றிய செயலாளர் லட்சுமிபதிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News