உள்ளூர் செய்திகள்

வள்ளலார் 200-வது அவதார தின நாள்

Published On 2022-10-06 09:50 GMT   |   Update On 2022-10-06 09:50 GMT
  • வள்ளலார் 200-வது அவதார தின நாள் அன்னதானம் 8-ந் தேதி நடக்கிறது.
  • 9.30 மணிக்கு அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடக்கிறது.

மதுரை

மதுரை மதிச்சியம் சமரச சன்மார்க சத்திய பிரார்த்தனை மன்றம் சார்பில் 59-வது ஆண்டு விழா வடலூர் வள்ளலார் 200-வது அவதார தின விழா, அன்னதான விழா ஆகியவை நடைபெறுகிறது.

நாளை (7-ந் தேதி)காலை 8 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நடக்கிறது. 8-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்ஜோதி விளக்கேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கார்த்திகாயினி ஜோதியை ஏற்றி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடக்கிறது.

முன்னாள் சன்மார்க்க சங்க தலைவர் ஜவஹர்லால் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க முன்னாள் தலைவர் ஹரிகோவிந்தன், மதுரை சன்மார்க்க சங்கம் சந்திரமோகன், மதுரை சூர்யா நகர் சன்மார்க்க சங்க ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருப்புகழ், திருவருட்பா, இன்னிசை கச்சேரி நடக்கிறது.

Tags:    

Similar News