உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம்

Published On 2023-09-06 07:18 GMT   |   Update On 2023-09-06 07:18 GMT
  • மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாநகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
  • பாதாள சாக்கடை திட்டப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை, நெல்லை, தூத்துக் குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள். நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டப் பணிகள், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள், விரிவாக் கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.

மேலும் நெல்லை, நாகர் கோவில், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் குடிநீர் விநியோக பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.

முன்னதாக அவனியா புரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஐராவத நல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பெரியார் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர்கள் பிரவீன்குமார், (மதுரை), சிவகிருஷ்ணமூர்த்தி, (நெல்லை), ஆனந்தமோகன், (நாகர்கோவில்) தினேஷ் குமார், (தூத்துக்குடி) நக ராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் முஜிபூர் ரகுமான், விஜயலட்சுமி, மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News