உள்ளூர் செய்திகள்
அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
- அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து நடந்தது.
அவனியாபுரம்
அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தாலுகா குழு செயலாளர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் மதுகூர் ராமலிங்கம் கண்டன உரை ஆற்றினார். இதில் குமரவேல்,நயினா செல்வம்,பால்பாண்டி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.