உள்ளூர் செய்திகள்

தேங்காய் மறைமுக ஏலம்

Published On 2022-07-22 08:10 GMT   |   Update On 2022-07-22 08:10 GMT
  • உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது.
  • இதில் 2 விவசாயிகளின் 1300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது .

உசிலம்பட்டி

உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் 2 விவசாயிகளின் 1300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது .

இதில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்ச விலையாக காய் ஒன்றுக்கு ரூ.8.14 எனவும், குறைந்தபட்ச விலையாக ரூ .6.87 எனவும் விலை கோரப்பட்டு மொத்தம் ரூ.9 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் கொப்பரை மறைமுக ஏலம் நடைபெறும்.

அனைத்து வேளாண் விளைபொருட்களையும் விவசாயிகள் தரம்வாரியாக பிரித்து எடுத்து வந்து விற்பனை செய்து அதிக லாபம் பெற்று பயன்பெறலாம். இந்த தகவலை உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News