உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

ரூ.1.70 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை

Published On 2022-06-12 08:14 GMT   |   Update On 2022-06-12 08:14 GMT
  • ரூ.1.70 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
  • செயல் அலுவலர் சுதர்சன். முன்னிலை வகித்தார்.

சோழவந்தான்

சோழவந்தான் விரிவாக்க பகுதியான ஆர்.எம்.எஸ். காலனியில் தனிநபர் பங்களிப்பு தொகையுடன் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம் கட்டவும், 15-வது வார்டு பகுதியில் உள்ள வைகையாற்று பாதை பழைய மயான வளாகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளுக்காகவும் பூமி பூஜை நடந்தது.

பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சுதர்சன். முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லதா கண்ணன், குட்கேர் என்வீர்மெண்ட் சிஸ்டம் நிறுவனத்தின் சி.இ.ஓ.முருகன், கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், குருசாமி, சத்தியபிரகாஷ், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமன், நிஷா கவுதமராஜா, ரேகா ராமசந்திரன், கணேசன், முத்துலட்சுமி சதீஸ், வள்ளிமயில், முனைவர் எம்.வி.எம். மருதுபாண்டியன் மற்றும் முனியாண்டி, பாண்டியன், மில்லர், கூலுசெந்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ஆர்.எம்.எஸ். குடியிருப்பு சங்க பொருப்பாளர் சந்திரசேகரன், சமூக ஆர்வலர்கள் மணிகண்டன், மண்டபம் கிரி, தாமோதரன், ஐ.டி. விங்க் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News