உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது

Published On 2022-06-29 09:59 GMT   |   Update On 2022-06-29 09:59 GMT
  • மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

விளாங்குடி சொக்கநாத புரம் முதல் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் விஜய் (23). இவர் விளாங்குடி கார்ப்பரேஷன் ஆபீஸ் எதிரே சென்றபோது அவரை வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட விளாங்குடி அண்ணா தெருவை சேர்ந்த குமார் மகன் கணேஷ் (21), புது விளாங்குடி சத்குரு நாதர் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் இருவரையும் கைது செய்தனர்.

மீனாம்பாள்புரம் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (28). இவர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு-குலமங்கலம் ரோடு சந்திப்பில் சென்ற போது அவரை வழிமறித்த விஜய் என்ற துப்பாக்கி விஜய் (25) கத்தி முனையில் மிரட்டி ரூ 420-ஐ வழிப்பறி செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் என்ற துப்பாக்கி விஜய்யை கைது செய்தனர்.

பீ.பி.குளம் காமராஜர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் இந்திரா நகர் முதல் தெருவில் சென்றபோது அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்செந்தூர் முத்து என்ற ஜூலி (27), சூர்யா (23) ஆகியோரை கைது செய்தனர்.

ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 2-வது தெருவைச்சேர்ந்தவர் விஜய் (32). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்ற போது இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி இவரிடம் இருந்து ரூ.1410ஐ வழிப்பறி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விஜய் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெ.ஜெ. ரோட்டை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் (23), பொன்னகரத்தை சேர்ந்த மனோஜ் சிவா என்ற மனோஜ் (22) சுடுதண்ணி வாய்க்காலை சேர்ந்த பிரசன்னா (25) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News