உள்ளூர் செய்திகள்

புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

புஷ்பமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-10 08:58 GMT   |   Update On 2022-09-10 08:58 GMT
  • மக்கள் நோய் நொடியின்றி வாழ, விவசாயம் செழிக்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க யாகங்கள் நடந்தது.
  • யாகசாலையில் வைக்கப்பட்ட 91 வகையான புனிதநீர் கலந்த கடங்கள் புறப்பட்டு கலகத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆண்டாங்கரையில் உள்ள புஷ்பமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் 3 காலை யாகசாலை பூஜை நடைபெற்று உலக நன்மை வேண்டியும், மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்க, குழந்தை பாக்கியம் வழங்க, திருமண தோஷம் நீங்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க யாகங்கள் நடந்ததுது.

யாகசாலையில் வைக்கப்பட்ட 91 வகையான புனித நீர் கலந்த கடங்கள்புறப்பட்டு கோபுர கலகத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News